தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக்கில் பணம் பறிக்கப்பட்டதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தகராறு

 

Advertisement

கோவை ஜூலை 5: கோவை கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாசல் முன் நேற்று காலை அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்த நிலையில் வந்தார். அவரை போலீசார் விசாரிக்க முயன்றபோது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். அப்போது அந்த வாலிபர் கோபம் அடைந்தார். ‘‘நான் கேரளாவில் இருந்து வருகிறேன்.

கோவையில் காலை 7 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை முன் மது பாட்டில் வாங்கி குடித்தேன். அப்போது என்னிடம் இருந்த பணம் 50 ஆயிரம், செல்போன் போன்றவற்றை அங்கே இருந்தவர்கள் பறித்து கொண்டார்கள். அதை பெற்று தர வேண்டும்’’ என்றார். இதை கேட்ட போலீசார் அவரை அங்கேயிருந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் அவர் செல்ல மறுத்து அடம் பிடித்தார். பணத்தை வாங்கி கொடுங்கள். நீங்கள் எதுவும் விசாரிக்காமல் போக சொல்கிறீர்கள். சட்ட விரோதமாக மது பாட்டில் விற்கிறார்கள் என கூறி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அவரை போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் ராஜேந்திரன் (40) என தெரிய வந்தது. ேபாலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement

Related News