தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி

 

Advertisement

தஞ்சாவூர், ஏப்.10: அமெரிக்காவில் வேலை என்று சமூக வலைதளங்களில் தகவல் அனுப்பி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா கோப்ராஜபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் அஜய். (23). இவர் செல்போனுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் வெளிநாட்டு வேலை உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு ஒரு போனும் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் அமெரிக்க வேலைவாய்ப்பு பெற விசா, பயண கட்டணத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை என்ற ஆசை வார்த்தையை கூறி நம்ப வைத்த அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் ஆன்லைனில் பல தவணைகளில் அஜய் ரூ. 7 லட்சத்து 93 ஆயிரத்து 300 செலுத்தினார்.

பணம் செலுத்தி பல மாதங்கள் கடந்த நிலையில் வேலை குறித்து எந்த தகவலும் வராததால் அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஜய் தஞ்சாவூர் சைபர்கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News