தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது கார் மற்றும் ₹90 ஆயிரம் பறிமுதல் ஆந்திராவில் இருந்து பேரணாம்பட்டிற்கு

பேரணாம்பட்டு, ஆக.2: ஆந்திராவில் இருந்து பேரணாம்பட்டிற்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ₹90 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆந்திரா மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம்- மேல்பட்டி சாலையில் உள்ள குருநாதர் கிராமம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரிய வந்தது. காரில் வந்தவரிடம் விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம், புங்கனூர் பகுதியை சேர்ந்த தரத்(29) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்து பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், புகையிலை பொருட்கள் கடத்திய கார், 40 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ₹90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி வழக்கு பதிந்து தரத்தை கைது செய்தார். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

Advertisement

Related News