தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் அதிரடி கைது

திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உள்ள கோயில் மற்றும் ஆஸ்ரமங்களை தரிசிப்பதற்காக, வெளி நாட்டு ஆன்மிக சுற்றுலா பயணிகள் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலைக்கு வந்திருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கிரிவலப்பாதையில் காளியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வெளி நாட்டுப் பெண் எதிர்த்து கூச்சலிட்டதால், அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, வெளிநாட்டுப் பெண் தூதரகத்துக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி தூதரகத்தின் சார்பில் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் ஏஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், காளியம்மன் கோயில் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவண்ணாமலை சந்தை மேடு பகுதியைச் சேர்ந்த சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் சேட்டு(38) என்பவர், வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேட்டு என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News