தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது காட்பாடியில்

வேலூர், ஜூன் 4: காட்பாடியில் வெல்டிங் தொழிலாளி வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். காட்பாடி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் வினோத்(25). வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மது போதையில் சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அன்று இரவு வீட்டுக்கு வந்து தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் யாரோ சிலர் வினோத்தின் வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடுவது கண்டு வினோத் எழுந்து வந்து பார்த்துள்ளார். கதவை திறக்க முடியவில்லை. அதற்குள் வீட்டின் கதவில் இருந்து தீப்பற்றி எரிந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வினோத்தின் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது வண்டறந்தாங்கல் டெல் குடியிருப்பை சேர்ந்த ஹரீஷ்குமார்(22) என்பது தெரியவந்தது. அவரை நேற்று பிடித்து நடத்திய விசாரணையில் வினோத்துடன் போதையில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஹரீஷ்குமாரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News