தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனப்பகுதியில் தீவைத்த வாலிபர் கைது

தேனி, ஏப். 5: தேனி அருகே வரட்டாறு வனப்பகுதியில் தோட்டங்களில் போர்வெல்லுக்கு பயன்படுத்தும் மின்வயர்களை திருடி வந்து, காப்பர் எடுப்பதற்காக வனப்பகுதியில் வயர்களை தீவைத்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர். தேனி அருகே தேனி வனச்சரகத்திற்குட்பட்ட வரட்டாறு பீட், கைலாசநாதர் கோயில் காப்புக்காடு நிலப்பகுதியில் நேற்று முன்தினம் காலை தீப்பற்றி எரிந்தது. இதனையறிந்து தேனி வனச்சரகர் செந்தில் தலைமையில் வனத்துறையினர் அங்கு தீயை அணைக்க சென்றனர்.

Advertisement

அப்போது, அப்பகுதியில் இரண்டு வாலிபர்கள் கையில் வயர்களுடன் சுற்றித் கொண்டிருந்தனர். வனபணியாளர்கள் அவர்களை நோக்கிச் சென்றனர். வனத்துறையினர் வருவதைப் பார்த்த ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்த பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைசேர்ந்த மலைச்சாமி மகன் ராஜ்குமார் வனத்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, இப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் போர்களுக்கு பயன்படுத்தும் மின்வயரை திருடி வந்து, வயரை எரித்து காப்பர் கம்பிகளாக்கி விற்பனை செய்ய வனப்பகுதியில் தீவைத்து எரித்ததாக கூறினார். இதனையடுத்து, ராஜ்குமார் மீதும், இவருக்கு உடந்தையாக இருந்து தப்பியோடிய அவரது சகோதரர் சிவா மீதும் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement