தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது 8 சவரன் நகைகள் பறிமுதல் ஆன்லைனில் ரூ.15 லட்சத்தை இழந்ததால் கடன்

சேத்துப்பட்டு, ஜூன் 6: ஆன்லைனில் ரூ.15 லட்சத்தை இழந்ததால் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபரை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, ஞானோதயம் கிராமத்தை சேர்ந்தவர் ரீட்டா(65). இவர் தனது மகன் ஜான் சத்தியசீலன்(45) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் பைக்கில் சேத்துப்பட்டு நோக்கி வந்தார். ருவண்ணாமலை பைபாஸ் அருகே பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 3 சவரன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று கலசப்பாக்கம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வாலிபர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததை பார்த்து நிறுத்தி விசாரித்தனர். மேலும், அவரது பைக் பலமுறை செயின் பறிப்பு சம்பவங்களின்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, மாம்பாக்கம் கிராமத்தை சேரந்தவர் மாயன் மகன் சீனிவாசன்(30) என்பது தெரியவந்தது.

அப்போது, அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவிக்கையில், பிடிபட்ட சீனிவாசன் வந்தவாசி அடுத்த தெள்ளாரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தாராம். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கமும் இருந்துள்ளது. அதில், ரூ.15 லட்சத்தை இழந்த நிலையில் கடன் ரூ.19 லட்சமாக மாறியுள்ளது. இதனால் செய்வதறியாது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் தடுத்து காப்பாற்றி உள்ளனர்.

கடன் தொல்லை அதிகம் இருந்ததால் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து அனந்தபுரம், சாலவேடு, சேத்துப்பட்டு விழுப்புரம் ஆகிய இடங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை 8 சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளார். தற்போது பிடிபட்ட நிலையில் அவரிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News