தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூரில் திருமணம் செய்வதாக ஆசை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

வேலூர்,: வேலூரில் திருமணம் செய்வதாக ஆசை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

வேலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் சில நாட்கள் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு மாணவி தான் படிக்கும் பாடப்பிரிவு பிடிக்கவில்லை என்றும், அதனால் தன்னை வேறு பள்ளியில் வேறொரு பாடப்பிரிவில் சேர்த்து விடும்படி கூறி உள்ளார். இதையடுத்து பெற்றோர் அவரை வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாக சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக பெற்றோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தனர். அப்போது அவர், வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தபூண்டியை சேர்ந்த செந்தமிழ் (26) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வருவதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறினார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து செந்தமிழை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்றுமுன்தினம் செந்தமிழை கைது செய்தனர்.

Advertisement

Related News