தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஆக. 31: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு, விரும்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வருடத்திற்கு ஒரு முறை வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995ன்படி மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த 31.7.2024 வரை மேற்படி குழு உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிகாலம் முடிவடைந்தநிலையில் புதியதாக குழு உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 6.9.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கீழ்காணும் உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்படும். இதில், குழு தலைவராக மாவட்ட கலெக்டர், செயல் உறுப்பினராக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உறுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாநில அரசு அலுவலர்கள், (தொகுதி அ நிலை அதிகாரிகள்/அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள்) உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த அரசு அலுவலராக பணிபுரியாத நபர்கள் உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சாராத நபர்கள் பொதுத்தொண்டில் ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement