தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற மறுப்பு

அம்பை,மே 25: நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாஞ்சோலையில் தங்கியுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பான சமவெளிக்கு வருமான வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அங்குள்ள தொழிலாளர்கள் வீட்டு விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்தனர். அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் அறிவுறுத்தலின்படி மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவி சப்-கலெக்டர் (பொ) சிவகாமிசுந்தரி, அம்பை தாசில்தார் வைகுண்டம் மற்றும் விஏஓ, கிராம உதவியாளர் உள்ளிட்டோர் மாஞ்சோலைத் தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து பாதுகாப்பு காரணங்களுக்காக 3 நாட்கள் சமவெளி நகர பகுதியில் வந்து தங்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் அங்குள்ள மக்கள் இதுபோன்ற வெயில், மழை, காற்று பலவற்றை நாங்கள் பார்த்துள்ளோம். மழை, காற்றெல்லாம் எங்களுக்குப்பழக்கமானது தான். நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்கிறோம். கீழே வந்தால் இங்கு எங்களுக்கான வாழ்வாதாரம் பறிபோகுமோ? என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே கீழே வரமாட்டோம் என்று அதிகாரிகளிடம் திட்ட வட்டமாக மறுத்து விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி விட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Advertisement

Related News