தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கரூர் அரசு கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கருத்தரங்கம்

 

கரூர், ஜூன் 27: கரூர் அரசு கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் அரசு கல்லூரியில், புதுடெல்லி விஷ்வ யுவ கேந்திரா, கரூர் கிராமியம் மற்றும் அரசு கல்லூரி தாவரவியல்துறை இணைந்து நடத்திய உலக சுற்றுச்சூழல் தினம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் சரவணன் வரவேற்றார். கிராமிய நிறுவன இயக்குனர் நாராயணன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்து பேசினார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார். நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகி சொக்கலிங்கம், தமிழ்த்துறை தலைவர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முதல்வரின் பசுமை தோழர் கோபால் கலந்து கொண்டு, வகுப்பறையில் இருந்து காலநிலை வரை நிலையான கிரகத்திற்கான இளைஞர்களின் வலிமை என்ற தலைப்பில் பேசினார். கிராமிய மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார். கருத்தரங்கின் முடிவில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.