தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

விராலிமலை, ஜூன் 16: அன்னவாசல் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகளில் வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என நிர்வாக வசதிக்கு ஏற்ப அடுத்து வரும் நாட்களில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி சுற்றுச்சூழலை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தலைமை ஆசிரியர் சிராஜ் நிஷா தலைமை வகித்தார்.உதவி தலைமை ஆசிரியர் விர்ஜின் டயானா முன்னிலை வகித்தார்.

இதில், பங்கேற்ற மாணவிகள் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை அதிகப்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது, மரக்கன்றுகளை நடுதல், நகரத்தில் மாசுபாட்டைக் குறைத்தல், வீடுகளில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் பொருத்துதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு போன்றவற்றைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகளில் வலம் வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement