தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனம் பகுதியில் மூலிகை வேர்கள் சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள்

திருப்புவனம், ஜூன் 5: வைகை ஆற்றுப்பாசன பகுதி திருப்புவனம் பகுதியாகும். வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் திருப்புவனம், மாரநாடு, பிரமனூர், பழையனூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே கால்வாயின் இருபுறமும்,ரோட்டை ஒட்டியும் பல இடங்களில் சாரநெத்தி, யானை நெருஞ்சி, கீழாநெல்லி, உள்ளிட்ட மூலிகை மருத்துவத்திற்கு பயன்படும் செடிகள் ஏராளமானவைகள் வளர்ந்துள்ளன.

Advertisement

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிற்கு கூலி தொழிலாளர்கள் பலரும் செடிகள், வேர்கள், காய்கள் உள்ளிட்டவற்றை பறித்து சென்று விற்பனை செய்கின்றனர். செடிகள், வேர்களின் தன்மையை பொறுத்து ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். சக்குடி தொழிலாளி கூறுகையில், மழை காலங்களில் கால்வாய்கள், கண்மாய் கரைகள், சாலையோரங்களில் செடிகள் அதிகமாக வளரும்.

சில நாட்கள் கழித்து சென்று பறிக்கலாம். பெரும்பாலும் சாரநெத்தி, யான நெருநெருஞ்சி, கீழாநெல்லி செடிகளை விரும்பி வாங்குவார்கள். இரண்டு பேர் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 கிலோ வரை சேகரிப்போம். நாள் ஒன்றுக்கு பத்து கி.மீ தூரம் வரை நடந்தே செல்வோம். தினசரி சேகரித்த செடிகளை காயவைத்து உலர்த்தி பின் வாரம் ஒரு முறை மதுரை சென்று விற்பனை செய்வோம். மழை இல்லாவிட்டால் செடிகள் கிடைக்காது என்றார்.

Advertisement

Related News