தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை நீரில் தவறி விழுந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பலி: ரயில்வே போலீசார் விசாரணை

Advertisement

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை தண்ணீரில் தவறி விழுந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பலியானார். வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய நடைமேடையில் இருந்து பயணச்சீட்டு பெறும் இடத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், அந்த சுரங்கப்பாதை நீரில் மிதப்பதாக பெரம்பூர் இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மரியரோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்த நபர் பெரம்பூர் மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோயில் லைன் பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பதும், இவருக்கு திருமணமாகி கலாவதி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும், மாலினி என்ற மகளும் இருப்பது தெரிய வந்தது. இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாசர்பாடி ஜீவா பகுதியில் டிக்கெட் வாங்க வரும்போது கால் தவறி சுரங்கப்பாதையில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. முருகனின் பிரேத பரிசோதனை முடிவில் தான் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும் என பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் தெரிவித்தனர்.

Advertisement