தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லியாம்பதி அருகே கரடி தாக்கியதில் பணியாளர் படுகாயம்

 

Advertisement

பாலக்காடு, ஜூன் 28: பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி அருகே சந்திரமலை பகுதியில் பணியாளரை கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

நெல்லியாம்பதி சந்திரமலை அருகே கொட்டயம்க்காடு டிவிஷனுக்கு உட்பட்ட ராணிமேடு எஸ்டேட்டில் மேற்கூரை பணிக்கு வந்தவர் திருச்சூரை சேர்ந்த சந்திரபாபு (56). இவர் அங்கு ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டின் அருகிலுள்ள கழிவறைக்கு செல்வதற்காக வெளியே வந்தவர் கரடியிடம் சிக்கியுள்ளார். அவரை கரடி கை, கால்களில் தாக்கி காயப்படுத்தியது. இதனால் சந்திரபாபு கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சக ஊழியர்கள், எஸ்டேட் தோட்டத்தொழிலாளர்கள் அவரை கரடியிடம் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நெம்மாரா அரசு சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல், சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நெல்லியாம்பதி வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement

Related News