தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பலி இறுதி ஊர்வலத்தில்

திருவண்ணாமலை, ஜூலை 8: வேட்டவலம் அருகே நடந்த இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கலந்தல்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சசிகுமார்(37), கூலித்தொழிலாளி. இவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த திருவானைமுகம் கிராமத்தில் விபத்தில் இறந்த உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில், சரமாரியாக பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பட்டாசு வெடிகள் சிதறியதில், ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த சசிகுமார் மற்றும் திருவானைமுகம் கிராமத்தைச் சேர்ந்த நவீன், ஏழுமலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, மூன்று பேரும் திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமா உயரிழந்தார். மேலும், நவீன், ஏழுமலை ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கூலித்தொழிலாளி பலியான சம்பவம் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News