தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியதில் தொழிலாளி பலி

 

Advertisement

குளத்தூர், மே 29: குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முடி திருத்தும் தொழிலாளி பலியானார். 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கருப்பசாமி(45). குளத்தூர் பஜார் வீதியில் சலூன் கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் 2மணிக்கு தூத்துக்குடியில் நடந்த திருமண விழாவிற்கு செல்வதற்காக கருப்பசாமி தனது நண்பரான பேச்சிமுத்து மகன் பாலமுருகன்(32) என்பவரது ஆட்டோவில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்றனர். ஆட்டோவை கருப்பசாமி ஓட்டியுள்ளார்.

அப்போது வேம்பாரைச் சேர்ந்த சூசை மகன் ஆரோக்கியராஜ் என்பவரும் கருப்பசாமியுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ வேப்பலோடையை அடுத்த கல்மேடு விலக்கு அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக திருச்செந்தூரிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி திருமுருகன் என்பவர் ஓட்டி வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ மற்றும் கார் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஆட்டோ உரிமையாளரான பாலமுருகன், ஆரோக்கியராஜ் மற்றும் காரில் வந்தவர்கள் என 8 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தருவைகுளம் போலீசார் பலத்த காயம் அடைந்த பாலமுருகன், ஆரோக்கியராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பலியான கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரில் வந்தவர்கள் சாயல்குடியில் முதலுதவி பெற்று முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

Advertisement

Related News