தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரல் அருகே மங்கலகுறிச்சி ஆற்று தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரல், ஏப்.18: ஏரல் அருகேயுள்ள கீழமங்கலகுறிச்சி மறவர் தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (53). வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியான இவருக்கு ஆறுமுகசெல்வி (45) என்ற மனைவியும், முத்துமாரி (15) என்ற மகளும் உள்ளனர். தினகரன் தினசரி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வடகால் வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது வடகால் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள மங்கலகுறிச்சி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றவர் வீடு திரும்பாததால் இரவு உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது கரை பகுதி அருகே இவரது செருப்பு மற்றும் உடைகள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கி தேடி இரவு அவரது உடலை கண்டுபிடித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து அவரது மனைவி ஆறுமுகசெல்வி ஏரல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, எஸ்.ஐ தாமஸ்டேனியல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தினகரன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் தினகரனுக்கு அவ்வப்பொழுது மயக்கம் வந்தவராக இருந்துள்ளார். இதேபோல் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது திடீர் என மயக்கம் வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News