தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றாலம் மெயினருவியில் ரூ.38 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு வளைவு, நடைபாதை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

தென்காசி, மே 24: குற்றாலம் மெயினருவி பாதுகாப்பு வளைவு மற்றும் அருவி பகுதியில் ரூ.38 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குற்றாலம் மெயினருவியில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவு சேதமடைந்தது. மேலும் பெண்கள் பகுதியில் இருந்து வடக்கு சன்னதி நோக்கி செல்லும் பெண்கள் நடைபாதையும் சேதமடைந்தது. தடுப்பு கம்பிகள் இடைவெளி வழியாக வெள்ள சமயங்களில் வயதான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆற்றில் விழும் அபாயம் இருந்தது. இதையடுத்து இவற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் ரூ.20 லட்சம் நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதி ரூ.18 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்து வடக்கு சன்னதி பஜார் செல்லும் பெண்கள் நடைபாதையானது தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு நிரந்தரமாக தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது. மேலும் மெயினருவி பாதுகாப்பு வளைவில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் வகையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சாரல் பெய்ய துவங்கி விட்டதால் மழையோடு, மழையாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News