தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் தேருக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகப்பெருந் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டத்திற்காக, தேர்கள் வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு வைகாசி பெருவிழாவிற்காக நேற்று முன் தினம் கோயிலில் கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது.

இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். இதில் ஜூன் 4ம் தேதி காலை 9.30 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஜூன் 8ம் தேதி அதிகாலை ஐம்பெரும் கடவுளர், திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதனை முன்னிட்டு தேரோட்டத்திற்காக கோயிலில் உள்ள மூன்று தேர்களையும் சுத்தம் செய்து வண்ணம் தீட்டும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Related News