தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கி முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்

 

Advertisement

ஊட்டி, ஜூலை 3: ஊட்டி-கோத்தகிரி சாலையில் கனரா வங்கி முன்பு மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் வழிந்தோட வசதியாக கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊட்டி-கோத்தகிரி சாலையில் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் இருந்து கழிவுநீர் வழிந்தோடுவதற்காக கழிவுநீர் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் வழியாக செல்லும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாயில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஒட்டி பெட்ரோல் பங்க், கனரா வங்கி, தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.  இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியது.

அண்மையில் பெய்த மழை காரணமாக கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் தேங்கியதால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் சாலையின் நடுவே நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது. இப்பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கால்வாயை அகற்றி விட்டு புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

Advertisement

Related News