தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் 4.3 கி.மீ மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

மீனம்பாக்கம், ஜூன் 13: சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் விதமாக 4.3 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலத்தில் திரிசூலம் மலையடிவாரம், ஜிஎஸ்டி சாலை மற்றும் மீனம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் ஒட்டுமொத்தமாக, சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் பெருக்கெடுத்து ஓடி, விமான நிலைய வளாகம் முழுவதும் தேங்கி நிற்கும். குறிப்பாக, விமானங்கள் நிறுத்தும் பகுதி, ஓடுதளப் பாதை போன்ற இடங்களில் பெருமளவு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும். இதனால், விமானங்கள் ரத்து, தாமதமாக இயக்கம், விமான நிலையம் தற்காலிகமாக மூடல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த முடிவு செய்தது. சென்னை ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசனையின்படி, சென்னை விமான நிலையத்தில் 4.3 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கால்வாய் நேரடியாக அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் கட்டப்பட உள்ளது.

இந்நிலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில், விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஆகியோர் கலந்துகொண்டனர். மழைநீர் வடிகால்வாய் பணிகள் வரும் நவம்பர், டிசம்பர் மாத பருவமழை காலத்திற்கு முன்னதாக கட்டி முடிக்க திட்டமிடப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News