தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

அஞ்சுகிராமம், ஏப்.14 : அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. ரோகிணி கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

Advertisement

நிகழ்ச்சியில் மகளிர் அதிகாரமளித்தல் குழு தலைவர் முனைவர் தேவி வரவேற்று பேசினார். சிவில் இன்ஜினியரிங் பேராசிரியை ரெனோ இன்பேன்ட சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக இலக்கியம் மற்றும் ஆன்மீக தளங்களில் பேருரைகள் ஆற்றும் பட்டிமன்ற தமிழ் மேடைப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் மற்றும் பட்டிமன்ற புகழ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெண்களுக்கு அதிகாரமளித்தல், மகளிர் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு பெறச்செய்தல் பற்றி எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் அதிகாரமளித்தல் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். மின் மற்றும் மின்னணு துறையின் பேராசிரியை முனைவர் சௌதிலி நன்றி கூறினார்.

Advertisement