தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டூவீலரில் லிப்ட் தருவதுபோல் பெண்ணிடம் நகை பறிப்பு

விருதுநகர், ஜூலை 4: விருதுநகரில் டூவீலரில் லிப்ட் தருவது போல நடித்து சென்னை பெண்ணிடம் நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராமர் மனைவி திலகம்(50). இவர், விருதுநகர் முத்தால்நகரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு வந்தார்.

நேற்று காலை விருதுநகர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய திலகம், விருதுநகர் குட்ஷெட் ரோட்டில் நடந்துசென்றபடி செல்போனில் உறவினரை தொடர்புகொண்டு, முகவரி கேட்டுள்ளார். மேலும், ஆட்டோ பிடித்து வரவா எனவும் கேட்டுள்ளார். இதை நோட்டமிட்டு அந்த வழியாக டூவீலரில் வந்த மர்மநபர், முத்தால்நகர் தனக்கு நன்றாக தெரியும், டூவீலரில் அழைத்துச் சென்று பத்திரமாக இறக்கிவிடுகிறேன், ஆட்டோ பிடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய திலகம் டூவீலரில் ஏறி அந்த நபருடன் சென்றார்.

முத்தால்நகர் அருகே வந்தபோது அந்த நபர் திடீரென டூவீலரை நிறுத்தினார். பின்னர், திலகம் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்செயின் மற்றும் அவரிடம் இருந்த ரூ.1000 பணத்தை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பினார். இது குறித்த புகாரின்பேரில், விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News