தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

 

சத்தியமங்கலம், ஜூலை 23: பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.  நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா வன கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி லாவண்யா (24). இவர்கள் இருவரும் தற்போது பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவிற்கு நேற்று காலை கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி புறப்பட்ட சில நிமிடங்களில் லாவண்யாவிற்கு பனிக்குடம் உடைந்ததால் வலியால் துடித்தார். இதையடுத்து ஒத்தப்பனை மரம் பஸ் ஸ்டாப் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் கோகுல் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் உதவியுடன் வாகனத்திலேயே பிரசவம் பார்த்ததில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாயையும் சேயையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.