தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியமரத்தில் கார் மோதி பெண் பலி; கணவருக்கு கால் முறிவு

நரசிங்கபுரம், ஜூன் 10: சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி சாஹிரா பானு (45). இவர்களுக்கு ரோஷிதா என்ற மகள் உள்ளார். சாஹிரா பானுவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் நசீர் அழைத்து சென்றார். ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் சென்ற போது, நசீருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் அடிபட்டு, சாஹிரா பானு பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஆத்தூர் டவுன் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், பொக்லைன் மூலம் காரை மீட்டனர். நசீருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த சாஹிராபானு சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News