தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மணல் லாரி மோதி பெண் பலி: உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல்

 

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மணல் லாரி மோதி பெண் பரிதாபமாக பலியானார். இதனால் பலியான பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த கைவண்டூரில் அரசு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியை சேர்ந்த கர்ணன் மனைவி வள்ளியம்மாள்(55) என்பவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது கைவண்டூர் கிராமத்திலிருந்து ஒரு லாரி திருப்பாச்சூர் வழியாக மண் எடுக்க வந்த போது வள்ளியம்மாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதனால் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து கிராம மக்கள் திருவள்ளூர் - கடம்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதனால் திருப்பாச்சூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement