தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாப பலி

புழல், ஜூலை 4: புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (46). இவரது, கணவர் ஜெகதீசன் ஓசூரில் உள்ள பிரபல கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கவிதாவின் தம்பி பாலாஜி மாதவரம் ரவுண்டானா வி.எஸ்.மணி நகர் அருகில் பட்டறை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் கவிதா, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கம்பெனிக்குச் சென்று தனது தம்பியை சந்தித்து பேசிவிட்டு, பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, மாதவரம் ரவுண்டானவில் இருந்து செங்குன்றம் செல்லும் வழியில் புழல் அடுத்த ரெட்டை ஏரி அருகே பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டுப் பகுதியில் இடித்துள்ளது.

Advertisement

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா, எழுந்து சுதாதரிப்பதற்குள் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா, வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மணிசிங் (35) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Related News