தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கில்லூர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற பெண் கவுன்சிலர் மனு

 

ஊட்டி, ஜூலை 15: கில்லூர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

கூடலூர் தேவர்சோலை பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேவர்சோலை பேரூராட்சி 13ம் வார்டு கில்லூர் பிரதான சாலையில் இருந்து எடலமூலா வழியாக மஞ்சுமூலா பகுதிக்கு சாலை கடந்த பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலையை இப்பகுதி பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் பயவன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

இதனால், இந்த சாலையை பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் இச்சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளி குழந்தைகளும் தவறி விழுந்து பாதிக்கின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம், இச்சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related News