தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி போல பேசி பெண்ணிடம் ரூ.7.70 லட்சம் மோசடி

 

Advertisement

கோவை, டிச. 25: கோவை சரவணம்பட்டி காளப்பட்டி ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் பிரேமா ஆனந்தி (39). இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் முகவரியை பயன்படுத்தி போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உங்களை அழைப்பார்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

சிறிது நேரத்தில் அவரை அழைத்த ஒருவர், தான் மும்பை போலீஸ் அதிகாரி எனவும், நீங்கள் போதைப்பொருள் அனுப்பியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க உங்களது வங்கி கணக்கில் இருக்கும் முழு பணத்தையும் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள். கணக்கை சரிபார்த்த பின்னர் பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை உண்மையென நம்பிய பிரேமாஆனந்தி 13 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.7.70 லட்சம் அனுப்பினார்.  ஆனால், அதன் பின்னர் அவருக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. விசாரித்தபோது, மோசடி நபர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து பிரேமாஆனந்தி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News