தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காற்றுக்கு சேதமடைந்த மின் கம்பம் மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

சத்தியமங்கலம்,மே31: பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பலத்த சூறைக்காற்று வீசியதோடு கனமழை பெய்தது. அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததோடு டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் உள்ள வீடுகளுக்கு மின் துண்டிப்பு ஏற்பட்டது.

Advertisement

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ராஜன் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஒரு வாரமாகியும் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் மின் துண்டிப்பை சரி செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மின்விநியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Advertisement

Related News