தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கால்வாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட மண் அப்புறப்படுத்தப்படுமா? காந்தி நகர் மக்கள் கோரிக்கை

மானாமதுரை, ஜூன் 14: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள காந்திநகரில் சாக்கடை கால்வாய் தாயமங்கலம் ரோடு உயர்த்தப்பட்டதால் சிறிய மழைக்கு கூட கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்து நகரில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெய்த மழையால் பெருகிய நீர் குடியிருப்புகளுக்குள் தேங்கியது. இதனால் வீடுகளை விட்டு வெளியறே முடியாமல் அப்பகுதியினர் சிரமத்திற்குள்ளாகினர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்து போக செய்தனர்.

இதையடுத்து நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆணையாளர் ஆறுமுகம் ஆகியோர் நேற்று முன்தினம் தாயமங்கலம் ரோட்டில் உள்ள கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைப்பு பணிகளை துவக்கினர். நேற்று கால்வாயில் சேதமடைந்த கற்கள், கழிவுநீருடன் தேங்கிய மண்கசடுகள் ரோட்டில் கொட்டப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் வாரச்சந்தைக்கு வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. அதிக ேபாக்குவரத்து உள்ள இந்த சாலையில் தோண்டப்பட்ட கால்வாய் கழிவுகளை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News