தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீர்நிலைகள், வரத்து கால்வாய்களை தூர்வார ஜேசிபி இயந்திரங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

 

Advertisement

சிவகங்கை, ஜூன் 15: சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணி, யூனியனின் கீழ் 12,000க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. இந்த கண்மாய்களில் பாசன நீரை தேக்கி வைத்து, விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டிற்காக கடந்த 2018-19ல் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் 20 ஜேசிபி இயந்திரங்கள் வாங்கப்பட்டன. விவசாய பணிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 என நிர்ணயித்து வாடகைக்கு விடப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் உள்ள வைகை, பாலாறு, மணிமுத்தாறு, மற்றும் சிற்றாறுகள் தூர்வாரப்பட்டன. மேலும் நீர் வரத்துகால்வாய்களை சரி செய்தனர். இதனால் மழைக்காலங்களில் கண்மாய்களில் நீர் தேங்கி, பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்குவது மற்றும் வாடகை வசூல் செய்வதில் தொய்வு ஏற்பட்டதால் 20 ஜேசிபி இயந்திரங்களும் வேளாண்மை பொறியியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 20 இயந்திரங்களும் செயல்பாடின்றி முடங்கி கிடக்கின்றன. அவற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News