தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரளி மின்வாரிய குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு

 

Advertisement

மஞ்சூர், டிச.2: மஞ்சூர் அருகே பரளி மின்வாரிய குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பரளி. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் மின் நிலையம் உள்ளதால் மின்வாரிய அலுவலர் மற்றும் ஊழியிர்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மின்வாரிய பகுதியில் புகுந்தது.

தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானையை கண்டு அப்பகுதியினர் பீதி அடைந்து உடனடியாக வீடுகளுக்குள் சென்று கதவுகளை அடைத்து கொண்டனர். இந்நிலையில் சிறிது நேரம் அப்பகுதியிலேயே முகாமிட்ட காட்டு யானை பின்னர் அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது. மின்வாரிய குடியிருப்பில் உலா வந்த காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement