தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொடைக்கானலில் பள்ளி முன்பு பவனி வந்த காட்டு மாடு: மாணவர்கள் அச்சம்

 

கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானலில் தனியார் பள்ளி முன்பு உலா வந்த காட்டு மாட்டினால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்தனர்.

கொடைக்கானலில் சமீபகாலமாக வனவிலங்குகளின் தொந்தரவும், அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடு, காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாக இருந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூர் பகுதியில் காட்டுப்பன்றி தாக்கியதில் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோல் காட்டுமாடுகளின் தாக்குதலுக்கு பலர் காயமடைந்த நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகம் முன்பாக காட்டுமாடு ஒன்று உலா வந்தது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்தனர். சிறிதுநேரத்தில் காட்டுமாடு அங்கிருந்து சென்ற பின்னரே அனைவரும் நிம்மதியடைந்தனர். எனவே வனத்துறையினர் கொடைக்கானல் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.