தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய தொழில் திறன் பள்ளி பயிற்றுநருக்கான திறன் சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பங்கேற்று தேர்ச்சியடைந்த 6 பயிற்றுநருக்கான கொத்தனார் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் மற்றும் 2 பயனாளிகளுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் கீழ் ஓட்டல் மற்றும் மீன் வளர்த்தல் மற்றும் விற்பனை நிலையம் அமைக்க தலா ரூ.1 லட்சம் காசோலையையும் கலெக்டர் லட்சுமிபதி வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் இயற்கை மரணம்

Advertisement

உதவித்தொகை 22 நபர்களுக்கு ரூ.3,74,000, விபத்து மரணம் உதவித்தொகை 2 நபர்களுக்கு ரூ.4 லட்சம், வங்கி கடன் மானியம் 10 நபர்களுக்கு ரூ.2,50,000 என மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.10,24,000 மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வழங்கினார். முன்னதாக கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து 543 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் 33 மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஹபிபூர் ரஹ்மான், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் தாமோதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்

பிரமநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News