தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு வரவேற்பு நிகழ்வு

 

மதுரை, ஜூலை 1: வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆங்கிலத்துறை, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.கோமதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி.அல்லி, புதிய ஆசிரியர்களை வாழ்த்தி, வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொலைநோக்கு பார்வை மற்றும் அதற்கான செயல்பாடுகள் குறித்தும், நிறுவனத்தின் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் கலாசார வழிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை (EEE) தலைவர் டாக்டர் ஏ.சண்முகலதா, கல்லூரியின் தொழில்முறை பணி கலாசாரம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார், மேலும் நிறுவனத்தின் கல்வித் தரங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள ஆசிரியர்களை ஊக்குவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு டீன் மற்றும் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் (ECE) துறைத் தலைவர் டாக்டர் எஸ்.வாசுகி, தொடர் கற்றலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஒரு நல்ல ஆசிரியருக்கு சமூகத்தை வடிவமைக்கும் சக்தி உள்ளது என்ற அவர், மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டினார். முடிவில் குமாரி எஸ்.பெனிட்டா நன்றி கூறினார்.

Related News