தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலாடி வட்டாரத்தில் நீர்நிலைகள் கணக்கெடுப்பு பயிற்சி கூட்டம்

சாயல்குடி, மே 15: கடலாடி வட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு மற்றும் நீர்நிலைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகேஷ் தலைமையில், சிறுபாசன கணக்கெடுப்பு, நீர்நிலைகள் கணக்கெடுப்பு பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது. சிறு பாசன கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. சிறு பாசன பிரிவு சார்ந்த தெளிவான புள்ளி விவரங்களை திரட்டி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

Advertisement

வருவாய் கிராம அளவில் நீர் பாசனத்திற்கு பயன்படும் கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான விவரங்கள் கிராமபுறங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமும், பேரூராட்சி வார்டுகளில் பேரூராட்சி பணியாளர்கள் மூலமும் இக்கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என வட்டாட்சியர் தெரிவித்தார்.

மேலும் தேசிய தகவல் மையம் உருவாக்கிய கைபேசி செயலி வாயிலாக இக்கணக்கெடுப்பு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2வது நீர் நிலைகள் தொடர்பான பயிற்சி, வட்டாச்சியர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது.

இக்கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சியில் அலுவலர்களுக்கு புள்ளியியல் அலுவலர் பத்மநாதன் விளக்கி கூறி பயிற்சி அளித்தார். இதில் மண்டல துணை வட்டாச்சியர் அழகப்பா, வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளர்கள்,வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News