தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப் பணி, நீர்தேக்கதொட்டிக்கு அடிக்கல்

சாத்தான்குளம், ஜூன் 23: பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப்பணி மற்றும் தரைநிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.50.60 லட்சத்தில் குடிநீர் வசதிக்காக வைரவன்தருவைகுளத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் விரிவாக்கம் செய்யும் பணி தொடக்க விழா, மாவட்ட ஊராட்சி நிதி ரூ.12 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தரைநிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து இரு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஒன்றிய ஆணையாளர் ராஜா ஆறுமுகநயினார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இஸ்மாயில், பெரியதாழை பங்குதந்தை சுசீலன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், மாவட்ட மீனவரணி தலைவர் சுரேஷ், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, பிரபு, பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.