தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைக்காட்டுபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு விளாத்திகுளம் யூனியன் ஆபிசை காலிகுடங்களுடன் மக்கள் முற்றுகை

எட்டயபுரம், ஜூன் 4: தலைக்காட்டுபுரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள், விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் தாலுகா தலைக்காட்டுபுரத்தில், கடந்த 10 தினங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் மின்மோட்டார் பழுதான நிலையில், இதுநாள் வரை சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் கிராம மக்கள், ஊருக்கு குடிநீர் வேன் வரும் வரை காத்துக் கிடந்து விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டி உள்ளதாகவும், இதனால் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும் புகார் கூறினர். இந்நிலையில் நேற்று தலைக்காட்டுபுரம் பஞ்சாயத்து தலைவர் பச்சைபெருமாள் தலைமையில் கிராம மக்கள், காலிகுடங்களுடன் திரண்டு சென்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Advertisement

Advertisement

Related News