தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சீர்காழி கழுமலையாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 

சீர்காழி, ஜூலை 2: சீர்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் வழியாக பாசன வாய்க்காலான கழுமலையாறு செல்கிறது . இந்த பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி,திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி,சிவனார்விளாகம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.

தற்போது காவேரி டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூரிலிருந்து கடந்த 12ம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து கடை மடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் கழுமலையாறு பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்டது. இதையடுத்து சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் உள்ள கழுமலையாறு பாசன வாய்க்கால் ஷட்ரஸிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நீர்வளத்துறை உதவிசெயற்பொறியாளர் கனகசரவணசெல்வன் அறிவுறுத்தலின்படி, இளம் பொறியாளர் தாமோதரன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன்,கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோவிநடராஜன், நிர்வாகிகள் விஜயக்குமார்,பாஸ்கரன் செல்வம் கலந்து கொண்டனர்.

Related News