தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெயிலின் தாக்கம் அதிகமானதால் பாளேஸ்வரம் தடுப்பணையில் வேகமாக குறையும் தண்ணீர்

ஊத்துக்கோட்டை, ஏப். 23: வெயிலின் தாக்கம் அதிகமானதால் பெரியபாளையம் அடுத்த பாளேஸ்வரம் தடுப்பணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் மழை நீர் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டால், நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாகச் சென்று பழவேற்காடு கடலில் தண்ணீர் கலக்கும். இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க பெரியபாளையம் பாளேஸ்வரம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு பெரியபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கரம்பாக்கம், நெல்வாய் பாளேஸ்வரம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னையையும் போக்க வேண்டும் என்பதால் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில் பாளேஸ் வரம் தடுப்பணை கடந்த மாதம் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தற்போது தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீர் அளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News