தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணவாளநகரில் நீர்நிலை விழிப்புணர்வு பேரணி: மரக்கன்று, மஞ்சப்பை வழங்கப்பட்டது

 

Advertisement

திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் ஊராட்சி, மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது வெங்கத்துார் ஏரி. பொதுப்பணி்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 360 ஏக்கர் பரப்பளவு மற்றும் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் மணவாளநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடந்த 2021ம் ஆண்டு முதல் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நட்டு பராமரித்து வருகி்ன்றனர். இதுவரை 2,200 பனை விதைகள் மற்றும் 760 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்குள் வெங்கத்துார் ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகி்ன்றனர். இந்நிலையில் 100வது வார களப்பணியை முன்னிட்டு நீர்நிலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி மணவாளநகர் இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கி வெங்கத்துார் ஏரிக் கரையை அடைந்தது. இதில் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி கலந்துகொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் சு.சபரிநாதன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் 500 மரக்கன்றுகள் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பையை வழங்கினார். சுற்றுச் சுழல், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்காகவே மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் பணியை மேற்கொண்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதில் மணவாள நகர் குடியிருப்போர் நலச் சங்கம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News