தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.60 லட்சம் கைகடிகாரம் இ-சிகரெட்கள் பறிமுதல்

மீனம்பாக்கம், மே 6: துபாயிலிருந்து சென்னை வரும் தனியார் விமானத்தில், விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துபாயிலிருந்து நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சுற்றுலா பயணிகளாக துபாய் சென்றுவிட்டு சென்னை வந்த 2 ஆண் பயணிகளை நிறுத்தி விசாரித்தனர்.

Advertisement

அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து, இருவரையும் தனியாக அழைத்துச் சென்று அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், விலை உயர்ந்த வெளிநாட்டு கை கடிகாரங்கள், இ-சிகரெட்கள் ஆகியவை இருந்தன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், முறையான ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், இ-சிகரெட்கள் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News