தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் சங்கம் போராட்டம்

விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்.

வருவாய் கிராம ஊழியர்கள், சிவில் சப்ளை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி, ஓய்வூதிய நிலுவைகளை உடன் வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழகங்களின் வரவு செலவு வித்தியாசத்தை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி ஓய்வூதியம் பெறுபவர்களில் 70 வயது, 80 வயது நிறைவடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கம்யூட்டேசன் பிடித்தம் செய்யும் ஆண்டை 12 ஆக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.