தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அருப்புக்கோட்டையில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

அருப்புக்கோட்டை, ஜூலை 30: அருப்புக்கோட்டையில் கடன் தொல்லையில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தட்சிணாமூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(49). இவரது மனைவி சீதாலட்சுமி(44). ரவி ஆர்டிஸ்ட் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரவி மனைவி சீதாலட்சுமி ஏல சீட்டு நடத்துபவர்களுக்கு தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை திரும்பி செலுத்த முடியாமல் அதிக கடன் ஆகிவிட்டதே என சீதாலட்சுமி புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சீதாலட்சுமி கடந்த 27ம் தேதி சொக்கலிங்கபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள தனது அம்மா வீட்டில் வைத்து அதிக அளவு மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த சீதாலட்சுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சீதாலட்சுமியின் கணவர் ரவி அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்