தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்

சிவகாசி, ஆக.18: சிவகாசி அருகே டிராக்டர் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் போத்திராஜா(45). இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கொத்தனேரியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அஜித், சதீஷ், வேல்முருகன் ஆகியோர் போத்திராஜாவிடம் பணம் கேட்டுள்ளனர்.

இதற்கு போத்தி ராஜா பணம் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித் பீர்பாட்டிலால் போத்திராஜா தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த மற்றவர்களும் போத்திராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.