தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெம்பக்கோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி: 2 பேர் காயம்

ஏழாயிரம்பண்ணை, அக்.12: வெம்பக்கோட்டை அருகே, கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி எஸ்பிஎம் தெருவை சேர்ந்தவர் கரண் பாண்டியன் (25). தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). நேற்று முன் தினம் இரவு, இருவரும் மடத்துப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பகுதியில் எதிரில் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கரண் பாண்டியன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Advertisement

மேலும் அப்பகுதியில் வந்த டூவீலர் ஒன்று விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (23) என்பவரும் காயமடைந்தார். தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக தாயில்பட்டி, கட்டணஞ்சேவல் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ராமமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement