தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு
Advertisement
விருதுநகர், டிச.9: விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான இடங்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
Advertisement