தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 7:தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டைகளில் உறுப்பினர்கள் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த சேவையை முறைப்படுத்துவதற்காக மென்பொருளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், குடும்ப தலைவரின் பெயர் மாற்றம் போன்றவை ஆண்டிற்கு இருமுறை மட்டுமே மேற்கொள்ள முடியும் (ஜனவரி முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவில் சப்ளை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடும்ப அட்டைதாரர் விரும்பும் போது இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்து குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் புகைப்படத்தை மாற்றி கொள்ளும் நடைமுறை ஏற்கனவே இருந்தது. ஆனால் தற்போது வரைமுறைப்படுத்தப்பட்டதால் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும். நினைத்த நேரத்தில் செய்ய முடியாது’ என்றார்.

 

Advertisement

Related News